search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர் படுகொலை"

    • முதியவரை மர்ம நபர்கள் கழுத்து அறுத்து படுகொலை செய்தது தெரியவந்தது.
    • முதியவரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் 4 ரோடு பஸ் நிறுத்தம் அருகே இன்று காலை 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து மேட்டூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மரியமுத்து, மேட்டூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் முதியவரை மர்ம நபர்கள் கழுத்து அறுத்து படுகொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து முதியவரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட முதியவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

    இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முதியவர் கொலை செய்தது யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் மேட்டூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×